சென்னை, பிப்ரவரி-12
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 11.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து, "நம்பிக்கை இருக்கை"-யில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

