Type Here to Get Search Results !

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு

Arun Kumar J

 அக்டோபர் 23|ஐப்பசி 06




சேலம்


பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் இன்று சேலம் இரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட இயக்க மேலாளர் திரு. சபரீஸ்குமார் மற்றும் கோட்ட துணை மேலாளர்  சரவணன் ஆகியோரை சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க கோரி மனு அளித்தனர் இந்த மனுவை சங்க செயலாளர் பா. ஜெபசிங் தலைமையில், துணைத் தலைவர் திருமதி சங்கீதாஸ்ரீ துணைச் செயலாளர்கள் திரு. இளங்கோவன் மற்றும் திரு. வெங்கடேசன் மூத்த உறுப்பினர் ரஃபீக் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


பொம்மிடி நிலையத்தில் நிறுத்தம் கோரப்பட்டுள்ள ரயில்கள்:


கோவை எக்ஸ்பிரஸ் (12675/12676)


திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695/12696) அல்லது (12623/12624)


நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339/16340)


பெங்களூரு நோக்கி செல்லும் (16315/16316) அல்லது (16525/16526) ரயில்கள்


விவேக் எக்ஸ்பிரஸ் (22503/22504)


அரக்கோணம் மெமோவிற்கு டேனிஷ் பேட்டையில் நிறுத்தம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


இம்மனுவை அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டு உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.