Type Here to Get Search Results !

ஆதரவற்று ஏழ்மையில் இறந்த முதியவரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

Arun Kumar J

 நவம்பர் 23|கார்த்திகை 07




தருமபுரி 


தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டாசு புறவடை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பல மாதங்களாக சாலையோரம் சுற்றி திரிந்துள்ளார், வயது முதிர்வின் காரணமாக இயற்கை மரணம் அடைந்து சாலையோரம் கிடந்துள்ளார். இவரது புனித உடலை மீட்டு விசாரித்ததில் இவரை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இன்று அதியமான் கோட்டை காவல் நிலைய காவலர் ராமர், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர் கணேஷ், மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் உறவாக எண்ணி முதியவரின் புனித உடலை நல்லடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 175 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.