Type Here to Get Search Results !

ஆதரவற்றும் ஏழ்மையில் இருந்தோரின் இரண்டு புனித உடல்களை இன்று நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

Arun Kumar J

டிசம்பர் 24|மார்கழி 09



185 ஆவது புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மை தருமபுரி அமைப்பு (NGO)


தருமபுரி 


தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்யும் சேவை பணியை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் செய்து வருகின்றனர். மொரப்பூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் ரயில்வே காவல்துறையினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை தருமபுரி அரசு மருத்துவமனையில் வைத்தனர். அதே போன்று பாப்பாரப்பட்டி பகுதியில் ஏழ்மையில் இறந்த சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் காவல்துறை உதவியுடன் மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மொரப்பூர் காவல் நிலைய காவலர் தேவராஜ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 185 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.