Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவையின் மூலம் 188 ஆவது புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Arun Kumar J

 சனவரி 10|மார்கழி 26


மை தருமபுரி அமரர் சேவையின் மூலம் 188 ஆவது புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது 



கிருஷ்ணகிரி 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜூஜூவாடி பகுதி அருகே ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சாலையை கடக்கும் போது அதிவேகமாக சென்ற வாகனம் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை, சிகிச்சை பலனின்றி இறந்த இவரது புனித உடலை ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், கிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 188 ஆதரவற்றும், ஏழ்மையிலும் இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.


செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.