பிப்ரவரி 23|மாசி 11
தருமபுரி,
சுமார் 200 பேர் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்புறம் மற்றும் கருவூலத்திற்கு பின்புறம் உள்ள பிராமினர் தெரு சாலையோரத்தில் சந்தை வியாபாரிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரை கடையோரம் காய்கரி விற்று பிழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் யாரோ ஒரிருவரின் பொய் புகாரின் பேரில் பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் அத்தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் தரைக்கடை பென்னாகரம் செவ்வாய் சந்தை வியாபாரிகளை அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதித்து தரைக்கரை சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் சந்தை வியாபாரிகள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார்.

