தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 25|புரட்டாசி 09
தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில் பள்ளிக்கு செல்லும் பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம் செய்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பட்டியலின மக்கள் நிண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
