கடலூர் அக்டோபர் 07 | புரட்டாசி 21
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகங்களின் தலைமையிடமாக கடலுார் பீச்ரோட்டில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. நேன்று இந்த அலுவலகத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு தீபாவளி வசூல் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் பேரில், டி. எஸ். பி.சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது கணக்கில் வராத 5 லட்சத்து 74 ஆயிரத்து 960 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

