அக்டோபர் 23|ஐப்பசி 06
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர் நிலைகள் பல இடங்களில் 50 சதவீதத்திற்கு மேல்நிரம்பி உள்ளன. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் அருகில் உள்ள ஏரிகள் குளங்கள் குட்டைகள் நீரோடைகள் மற்றும் அனைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்க கூடாது எனவும் மேலும் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் மோஞச்சளுக்கோ நீர் அருந்தவோ அனுமதிக்க கூடாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

