அக்டோபர் 26|ஐப்பசி 10
தருமபுரி
மைதருமபுரி_அமரர்_சேவை நல்லடக்கம்_172
தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க இரண்டு முதியவர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, மொரப்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர் ஜெயப்பிரியா மை தருமபுரி அமைப்பின் செயலாளர் முனைவர் தமிழ்செல்வன் கணேஷ் குமார் ராஜா பார்வதி தம்பதியினர் சண்முகம் ராமமூர்த்தி மணிவேந்தன் ஆமா அருள்குமார் மீனா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 172 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

