டிசம்பர் 28|மார்கழி 13
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட வந்தவாசி தொடக்க வேளாண்மை வங்கியில் கடந்த சில மாதங்களாக விவசாய கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி ஆகும் என்று கருதிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் செல்வந்தர்கள் வந்தவாசி Financial Manager அவர்களை தன்வசமாக்கிக் கொண்டு லஞ்சம் கொடுத்து கடன் பெற்று வருவதாகவும் அதே தருணத்தில் ஏழை எளிய விவசாயிகள் கடன் கேட்கும் பொழுது தற்பொழுது வழங்கப்படவில்லை என்று புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது (உதாரணமாக ) செல்வந்தர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் Financial Manager அவர்கள் மாட்டு பராமரிப்பு செலவுக்காக நான்கு முதல் ஐந்து மாடுகளுக்கு பராமரிப்பு தொகை வழங்கி வருவதாகவும் இதேபோன்று ஏழை எளிய விவசாயிகள் கடன் கேட்டால் புறக்கணித்து வருவதாகவும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர் எனவே இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் வந்தவாசி Financial Manager மற்றும் ஏழை எளிய விவசாயிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்

