Type Here to Get Search Results !

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட மை தருமபுரி NGO, அறம் அறக்கட்டளை அமைப்பினர்

Arun Kumar J

 நவம்பர் 20|கார்த்திகை 04






தருமபுரி 


தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரிந்து வந்துள்ளார். பொதுமக்கள் பலரும் இவரை மீட்க மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டனர். இன்று காலை இவரை பெண் காவலர்கள் மூலம் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவில் மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் ப்ரிதா முன்னிலையில் சேர்க்கப்பட்டார். இந்த பெண்மணி தனது பெயர் மஞ்சுளா என்றும் தெலுங்கு மொழியில் பேசுகிறார். இவர் யாரென்று தெரியவில்லை. மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அறம் அறக்கட்டளை ரமேஷ், பெண் காவலர்கள் மயில், தாமரைச்செல்வி ஆகியோரை மருத்துவர் பழனியப்பன் அவர்கள் பாராட்டினார்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.