டிசம்பர் 07|கார்த்திகை 21
கடத்தூர்
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கடத்தூரில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் முன்னிலையில், கையூட்டு மட்டும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா. ஜெபசிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு சிலம்பரசன், திரு தமிழருவி, திருமதி பாப்பாத்தி, திரு வினோத் குமார், திரு சின்னசாமி, திரு ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

